தமிழக அரசியலில் தவெக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இழுபறி நீடிக்கும் சூழலில், அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 30 பேர் விஜய்யின் ஆட்சிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தவெக-வுக்கு ஆதரவு தரத் திட்டவட்டமாக மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில், தனது கட்சி எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் தாவிவிடாமல் இருக்க, எடப்பாடி பழனிசாமி மீண்டும் புகழ்பெற்ற ‘ரிசார்ட் பார்முலாவை’ கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ-க்களைத் தனித்தனியாகப் பிரித்து ரகசிய இடங்களில் தங்கவைப்பதன் மூலம் கட்சி உடைவதைத் தடுக்கவும், விஜய்யின் ஆட்சியமைக்கும் கனவுக்கு முட்டுக்கட்டை போடவும் அதிமுக தலைமை தீவிரமாக முயன்று வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
