நவக்கிரகங்களின் இளவரசனாக இருக்கும் புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம் மற்றும் நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இதனிடையே புதன் 2025ஆம் ஆண்டின் கடைசியில் ராசியை மாற்றுகிறார். அதுவும் இந்த பெயர்ச்சி டிசம்பர் 29ஆம் தேதி குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்குள் நுழைய உள்ளார். அதன்படி புதனின் இந்த பெயர்ச்சியால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் நற்பலன்களை பெறப்போகிறார்கள்.
மேஷம்:
எந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல பலன்களை பெறுவார்கள். உயர் அதிகாரிகள் உடனான உறவு சிறப்பாக இருக்கும். தொழில் அதிபர்களுக்கு நல்ல லாபத்தை தரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
சிம்மம்:
வாழ்வில் நல்ல மாற்றங்களை காண்பார்கள். பேச்சுத் திறன் மேம்படும். புதிய தொழில் தொடங்கினால் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக மாறும். வாழ்க்கைத் துணையுடன் பிணைப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
தனுசு:
இந்த ராசிக்காரர்களுக்கு பணியாற்றும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உடனான உறவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க இந்த காலம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் வந்து சேரும். தொழில் ரீதியாக முன்னேற்றத்தை காண்பீர்கள்.
