கர்நாடக வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் மிக அருகில் இருந்து சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த முதற்கட்ட அறிக்கையில் அவர்கள் மிக அருகிலிருந்து சுடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அவர்கள் எதற்காக அந்த நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்றார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது இந்த வழக்கை சிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருவதால் முழுமையான விசாரணை நிறைவடைந்த பின்னரே இதன் பின்னணியில் உள்ள உண்மை முழுமையாக வெளிவரும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
