“ஓரினச்சேர்க்கை உறவு…” யூடியூபில் வீடியோ பார்த்து உடலை துண்டு துண்டாக வெட்டிய நபர்…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 11, 2025

Spread the love

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் கட்லா வெங்கடேஷ்வர்லு என்பவருடன் ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாக தெரிகிறது. பண பற்றாக்குறையால் தவித்த அசோக்கிற்கு கட்லா வெங்கடேஷ்வர்லு நிதி உதவி செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி கட்லா வெங்கடேஷ்வர்லுவிடம் இருக்கும் தங்கம் மற்றும் பணத்தை திருட அசோக் திட்டமிட்டார். அவரை நேரில் வரவழைத்து கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசிவிட்டு அசோக் தப்பி சென்றார். அசோக்கிற்கு மேலும் இரண்டு பேர் உதவியாக இருந்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அசோக் உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது அசோக் யூடியூபில் கொலை செய்வது எப்படி என்பது தொடர்பான வீடியோவை பார்த்து பிளான் போட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.