இன்றுடன் முடிவுக்கு வரும் டாப் 3 சீரியல்கள்.. சின்னத்திரை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர்கள்..!!

By Nanthini on ஆவணி 17, 2024

Spread the love

சின்னத்திரை மூலம் மெகா தொடராக ஒளிபரப்பாகி வரக்கூடிய சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றன. ஒவ்வொரு சேனலும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடங்களை பிடிக்க முந்திக்கொண்டு போட்டி போடுகின்றன. குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

   

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 1100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் அண்ணன் தங்கை பாசத்தில் யாராலும் மிஞ்சிவிட முடியாது என்பதை இந்த சீரியல் உணர்த்திவிட்டது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் கிளைமேக்ஸ் காட்சி திருப்திகரமாக இருக்கிறது என்றால் அது வானத்தைப்போல சீரியல் தான் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

   

 

இந்த சீரியல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் இதற்கு பதிலாக மூன்று முடிச்சு என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு அடுத்ததாக ஜீ தமிழில் சண்டைக்கோழி சீரியல் 350 எபிசோடுகளை நெருங்கியுள்ள நிலையில் அதுவும் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

அடுத்ததாக கௌதம் மற்றும் இந்திரா நடித்து வரும் சீரியல் ஆன இந்திரா சீரியலும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்த சீரியலும் 500 எபிசோடுகளை தாண்டிய நிலையில் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜீ தமிழில் இந்த இரண்டு நாடகங்களும் விரைவில் முடிவுக்கு வருவதால் இதற்கு பதிலாக புத்தம் புதிய சீரியல்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன.