தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவி, ஸ்ரீஜா, ராகேஷ் ஆகியோர் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தனர். கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட வைஷ்ணவி திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வைஷ்ணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அன்று இரவு 10:30 மணிக்கு ராகேஷ் மன உளைச்சலில் தூங்க சென்றார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தியுள்ளனர். மறுநாள் காலை ராகேஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். அதற்கு மறுநாள் ஸ்ரீஜாவும் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதால் அடுத்தடுத்து ராகேஷும் ஸ்ரீஜாவும் தற்கொலை செய்து கொண்டது அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
