பணம் பறிக்க நடந்த கொடூரமா?… அமெரிக்காவில் 28 வயது இந்தியர் துள்ளத்துடிக்கக் கொலை… கதறி அழும் பெற்றோர்…!!

By Gayathri on ஆவணி 24, 2026

Spread the love

நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பீட்சா விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான இந்திய இளைஞர் குர்தீப் சிங், ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் வசிக்கும் தனது பெற்றோருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் உயரிய நோக்கத்தோடு, 13 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி அவர் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். எனினும், மார்பு மற்றும் உடலின் பல பகுதிகளில் கொடூரமாகச் சுடப்பட்டு அவர் பலியானதை அடுத்து, இது பணப்பறிப்புக்காக நடந்த தாக்குதலாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.

பல ஆயிரம் மைல்கள் கடந்து சென்று உழைத்த அந்த இளைஞரின் கனவுகள் அனைத்தும் தற்போது நிராசையாகிப் போயுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளி இதுவரை காவல் துறையினரால் கைது செய்யப்படாத நிலையில், குற்றவாளியை விரைவாக அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும் என குர்தீப்பின் குடும்பத்தினர் கண்ணீருடன் வலியுறுத்தியுள்ளனர். மேலும், எதிர்பாராத இந்த இழப்பால் தவித்து வரும் அவர்கள், தங்கள் மகனின் உடலை சொந்த ஊரான பஞ்சாபிற்குப் பத்திரமாக எடுத்து வரச் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உதவிட வேண்டும் என்றும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.