₹2,500 கனவு பலிக்காதா..? முதல்வர் விஜய் சொன்ன அந்த வார்த்தை.. ஆவலோடு காத்திருந்த பெண்க்ளுக்கு பேரிடி..!!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் மற்றும் திருமண உதவியாக 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கும் திட்டங்கள் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனால், புதிய அரசு பதவியேற்றவுடன் இந்தச் சலுகைகள் உடனே கிடைக்கும் என்று தமிழக பெண்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும், தற்போதைய நிதி நிலைமை குறித்து விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் விஜய், அரசு கஜானா காலியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். முந்தைய அரசின் நிதி மேலாண்மை மற்றும் தற்போதைய கடன் சுமையால் இந்தத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கென கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகவும், நிதி நிலைமையைச் சீரமைத்த பிறகே இத்திட்டங்கள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

   

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, ஆவலுடன் காத்திருந்த பெண்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, குடும்பத் தலைவிகள் தங்களின் பொருளாதாரத் தேவைகளுக்காக இந்த ரூ.2,500 தொகையை பெரிதும் நம்பியிருந்த சூழலில், “கால அவகாசம்” என்ற பதில் அவர்களை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது. எனினும், தனது வாக்குறுதிகளைத் தவறாமல் நிறைவேற்றுவேன் என்று முதலமைச்சர் விஜய் உறுதி அளித்துள்ளதால், அடுத்தடுத்த பட்ஜெட் அறிவிப்புகளில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஒருபுறம் நிலவுகிறது.