“மகளிருக்கு ₹2500 உரிமைத் தொகை எப்போது..? வெளியான அதிரடி புதிய அப்டேட்..!”

By Swetha on வைகாசி 23, 2026

Spread the love

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் கூடுதலாக 3 மாதங்கள் வரை காலம் ஆகலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்தின் முழு வடிவத்தையும் நிர்வாக ரீதியாக மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தற்போது தீவிர பரிசீலனையில் உள்ளன. எனவே, இந்த மறுசீரமைப்புப் பணிகள் முடியும் வரை, தற்காலிக ஏற்பாடாக பழைய முறைப்படியே தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

   

அதே நேரத்தில், இந்தத் திட்டத்தில் விடுபட்ட மற்றும் புதிய பயனாளர்களை இணைப்பதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்கப்படலாம் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.