“ஐயோ காப்பாத்துங்க…” சேற்றுக்குள் புதைந்த மூன்று மாடி கட்டிடம்… ஒரே இடத்தில் பிணமாக மீட்கப்பட்ட 24 பேரின் பேரதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 2, 2026

Spread the love

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கோரப் பேரழிவு வெள்ளத்தில் சிக்கி, 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தின் ரசுவா எல்லைக்குட்பட்ட நுவாகோட் மாவட்டத்தின் பெட்ராவதி கிராமத்தில், பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியும் பல கட்டிடங்களை அடியோடு மூழ்கடித்தன. இப்பகுதியில் காவல்துறை நடத்திய ட்ரோன் சோதனையின் மூலமாக, சேற்று வெள்ளத்தில் சிக்கியிருந்த ஒரு மூன்று மாடி கட்டிடத்திற்குள் மனித உடல்கள் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்டது.

மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து கிடைத்த தகர ஷீட்டுகள், மரக்கட்டைகள் மற்றும் கயிறுகளைக் கொண்டு ஆபத்தான வழியை ஏற்படுத்தி அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அங்கு உறைந்துபோன சேற்றுக்குள் புதைந்திருந்த 12 பெண்கள், 11 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 24 உடல்களை அவர்கள் கடும் சிரமத்திற்கிடையில் மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் பகுராம் அவஸ்தி என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அதன் தரைதளத்தில் ‘உத்தரகாயா மினி மார்ட்’ என்ற அங்காடி இயங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பாதுகாப்பிற்காக இந்தக் கட்டிடத்திற்குள் தஞ்சமடைந்தனரா அல்லது அங்காடிக்கு வந்த வாடிக்கையாளர்களா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. கட்டிடத்தின் சில பகுதிகளை இன்னும் அடைய முடியவில்லை என்றும், அங்கும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நுவாகோட் காவல் கண்காணிப்பாளர் பிபின் ரெக்மி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் தீவிரப் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.