ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் முடிந்து அய்யம்பாளையம் ஏரிக்கரை பகுதியில் தனியாகச் சென்ற தர்மபுரி மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம் பெண்களை, மதுபோதையில் இருந்த கும்பல் மடக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது. மேலும், தங்கள் நண்பர்களை வரவழைத்து அந்தப் பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து, பணம் மற்றும் செல்போன்களைப் பறித்துக் கொண்டு, “எப்போது பணம் கேட்டாலும் தர வேண்டும், இல்லையென்றால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம்” என்றும் மிரட்டியுள்ளனர். இதற்கிடையே தர்மபுரி பெண்ணிடம் போனில் ரூ 1 லட்சம் மிரட்டிப் கேட்டதால், பயந்துபோன அப்பெண் முதற்கட்டமாக கூகுள் பே மூலம் ரூ 4,000 அனுப்பியுள்ளார்.
தொடர் மிரட்டல்களால் செய்வதறியாது தவித்த அந்தப் பெண்கள் தைரியமாக காவல்துறையில் புகார் அளித்தனர். திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், அந்தப் பயங்கர கும்பல் இதுவரை சுமார் 23 பெண்களை இதேபோன்று நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, இந்தச் செயலில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைனர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். மீதமுள்ளவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட ஆடையூரைச் சேர்ந்த வாசுதேவன், ஆகாஷ், அப்பு, ஹரிகரன், ஷர்மா, அருண்குமார், சிவகணேசன் (எ) சூர்யா மற்றும் துரை ஆகிய 8 பேர் மீது தற்போது கடுமையான குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீக பூமியில், கிரிவலம் சென்ற பெண்களைக் கடத்தி மிரட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…