வீட்டில் ரொம்ப டார்ச்சரா இருக்கா?… பள்ளி மாணவர்களுக்காக கேரளா அரசின் புதிய அசத்தலான திட்டம்…!

By Srimathi on ஆவணி 10, 2025

Spread the love

வீடுகளில் குழந்தைகளுக்கு நடக்கும் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் “உதவி பெட்டி” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது, கேரளா அரசு. இதுகுறித்து அம்மாநில கல்வி அமைச்சர் சிவகுட்டி பேசுகையில், வீடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளை தெரிந்து, அவர்களின் பிரச்சனைகளை ரகசியமாக அறிந்து, அதனை தீர்த்து வைக்க உதவி பெட்டி நிறுவப்படும் என்று தெரிவித்தார்.

குழந்தைகளை துன்புறுத்துவதை தடுக்க சுரக்சா மித்ரம் என்ற செயல் திட்டத்தையும் அறிவித்தார். ஆழப்புழா அருகே வீட்டில், தந்தையும் அவரின் இரண்டாவது மனைவியும் துன்புறுத்துவதாக 9 வயது சிறுமி தனது நோட்டில் எழுதி இருந்ததை கண்ட பள்ளி ஆசிரியர், சிறுமியிடம் விசாரித்து பொழுது அச்சிறுமி துன்புறுத்தப்பட்டுள்ளதாக அறியவந்தது.