புதுச்சேரியில் உள்ள தனியார் மதுபான கடையில், இளைஞர்களுக்கும் பவுன்சர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொல்லப்பட்டார்.
மதுபாரில் மது அருந்திய போது, பெண் ஒருவரை இடித்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், இளைஞர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, பவுன்சர் அங்கிருந்த கத்தியால் இளைஞர் ஒருவரை குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கத்தியால் குத்தப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். மேலும் படுங்காயமடைந்த, மேலூரை சேர்ந்த ஷாஜன் என்பவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
