தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஐதராபாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ‘பாராவீல்’ (Paravill) ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. 234 தொகுதிகளிலும் தலா 30 ஆயிரம் வாக்காளர்கள் வீதம், மொத்தம் 70 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வு, தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. முந்தைய ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் துல்லியமான முடிவுகளைக் கணித்த இந்த நிறுவனத்தின் தரவுகள், தற்போதைய அரசியல் சூழலை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணி 41.5 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி 36.2 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், புதிதாகத் தொடங்கப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 13.6 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி 7.9 சதவீத வாக்குகளுடன் நான்காம் இடத்திலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தவெக கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது, தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தி உருவாகி வருவதை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சென்னையைப் பொறுத்தவரை, அரசியல் களத்தில் ஆச்சரியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல தொகுதிகளில் அதிமுக-பாஜக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி, திமுகவிற்கு அடுத்தபடியாக தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் விஜய் பெற்றுள்ள இந்த செல்வாக்கு, வரும் தேர்தலில் அவர் ஒரு முக்கியமான அரசியல் காரணியாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடுமா அல்லது ஏதேனும் கூட்டணியில் இணைமா என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.
தமிழகத்தில் தற்போதைக்கு நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், ஆளுங்கட்சியான திமுக தனது ஆட்சியைத் தக்கவைக்க முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம், 1967 மற்றும் 1977-இல் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை மீண்டும் ஏற்படுத்தப் போவதாக விஜய் நம்பிக்கை தெரிவித்து வருகிறார். எவ்வாறாயினும், பாராவீல் நிறுவனத்தின் இந்தத் தரவுகள், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சுவாரசியமான திருப்பத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்பதையே உணர்த்துகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க, கூட்டணியின் மாற்றங்கள் மற்றும் கள நிலவரங்கள் எப்படி மாறப்போகிறது என்பதைப் பொறுத்தே இறுதி முடிவுகள் அமையும்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…