கூட்டுறவு வங்கிகள் சங்கங்களில் காலியாக இருக்கும் 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை இணையதளம் மூலம் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.. அவற்றை பரிசீலனை செய்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
செப்டம்பர் 12ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும். அக்டோபர் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு நவம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தி இறுதி முடிவுகளை நவம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
