BIG BREAKING: 200 யூனிட் இலவசம்… தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு… சற்றுமுன் CM விஜய் அதிரடி…!

By Nanthini on வைகாசி 16, 2026

Spread the love

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் புதிய 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், கடந்த மே 10-ஆம் தேதி முதல் கணக்கிடப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த இலவச மின்சாரத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டத்தின்படி, இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட்டுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்; அதே வேளையில், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது இதற்கான அரசாணை வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.