சென்னை ஆவடியை அடுத்த பொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். 38 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை பொத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சதீஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த நபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் வீட்டிற்குச் சென்று கத்தியை எடுத்துவந்து சதீஷைச் சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த ஆண்டு பேனர் வைப்பது தொடர்பாகச் சதீஷிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான பரத் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதமே இக்கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்துத் திருவள்ளூரில் பதுங்கியிருந்த பரத்தைக் காவல்துறையினர் விரைந்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி கர்கா டிங்கிள் கோங்கோ, தன்னை 'சீனக் குழந்தை' என்று அழைத்ததற்கு எதிராகப் பேசி இணையத்தில்…
ஜப்பானில் வசித்து வரும் சோனம் மிதா என்ற இந்தியப் பெண், வாடகை சைக்கிளில் உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அப்போது, தான்…
நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து…
ஹென்னூர்-பாகலூர் சாலையில் தேங்கியுள்ள மணல் மற்றும் சேறு காரணமாக புதன்கிழமை அன்று தனது மகளின் இருசக்கர வாகனம் சறுக்கி விழுந்ததைத்…
உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய ஒரு நாள், கணப்பொழுதில் பேரதிர்ச்சியாக மாறியது. ஆற்றில் இறங்கி குளித்துக்…
யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சௌதுப்பால் மண்டலம், பந்தங்கி கிராமத்தைச் சேர்ந்த ரபோலு தனய்யா என்ற விவசாயி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…