பால் வாங்க சென்ற தாய்… வீட்டில் தனியாக இருந்த 2 வயது குழந்தை… திரும்பி வந்தபோது பாத்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி…!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டு குளியல் அறையில் வைக்கப்பட்டிருந்த வாலி தண்ணீரில் தலைகீழாக விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வழிவீடு முருகன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார் மற்றும் வைதேகி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு வயதில் கிருத்விகா முத்ரா என்ற மகள் இருந்துள்ளார். சுரேஷ்குமார் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் நேற்று வழக்கம்போல அவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் மனைவியும் குழந்தையும் மட்டும் இருந்துள்ளனர். இதனிடையே சுரேஷ்குமாரின் மனைவி வைதேகி பக்கத்து தெருவில் பால் வாங்க குழந்தையை வீட்டில் தனியாக விட்டு சென்றுள்ளார்.

பிறகு திரும்பி வந்து பார்த்தபோது இரண்டு வயது மகள் வீட்டு பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த வாலியில் இருந்து தண்ணீரில் தலைகீழாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வைதேகி உடனையே குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். இரண்டு வயது குழந்தை பாத்ரூமில் இருந்த வாலியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.