அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடத்திய ஆய்வுகளின்போது, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய ஒதுக்கீடுகள் மற்றும் ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் அவசர கதியில் முடிவுகள் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறையற்ற நிர்வாகத் தலையீடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்துவதற்காக, தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் (வருவாய்) திரு. வி. காசி மற்றும் தலைமை பொறியாளர் (மரபுசாரா எரிசக்தி) திரு. பி. சந்திரசேகரன் ஆகிய இரு அதிகாரிகளையும் தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த முறைகேட்டுப் புகார்களில் தொடர்புடைய பசுமை எரிசக்தி கழகத்தின் ஓய்வு பெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு. எஸ். மங்களநாதன் என்பவரின் ஓய்வூதியப் பலன்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மின்வாரிய விதிமுறைகளின்படி துறைரீதியான முறையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
