கேரள மாநிலம் மூவற்றுப்புழா பகுதியில் ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென்று கடந்த ஜூலை நான்காம் தேதி மாயமானது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திருடப்பட்ட கார் பதிவு எண் மாற்றப்பட்டு திருவனந்தபுரத்தில் ஓடுவதாக தகவல் வந்துள்ளது. உடனே அந்த காரை மடக்கி பிடித்து விசாரித்ததில் காரில் இருந்து இறங்கி ஓட முயன்ற நபர் மூவாற்றுப்புளா பகுதியை சேர்ந்த அல்சா பித் என்ற 19 வயது வாலிபர் என தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனது கள்ள காதலியுடன் உல்லாசம் அனுபவிப்பதற்காக காரை திருடியது அம்பலமானது. அதாவது திருவனந்தபுரம் பூந்துறையை சேர்ந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் பிறகு அவரை அனுபவிக்க வாலிபர் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக வலை வீச கள்ளக்காதலையும் சம்மதித்துள்ளார். ஆனால் விடுதிக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த அந்த வாலிபர் காரை திருடு முயன்றார். அதன்படி காரை திருடிய அவர் பதிவு எண்ணை மாற்றிய நிலையில் அந்த காரில் ஊர் ஊராகச் சென்று கள்ளக்காதலையுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். இப்படியான நிலையில்தான் அவர் போலீஸ் இடம் சிக்கினார். ஆனால் அந்த சமயத்தில் அவருடன் கள்ளக்காதலி இல்லை. கள்ள காதலி குறித்து போலீசார் விசாரித்த போது அவர் இரண்டு குழந்தைகளின் தாய் என்றும் அவரும் கடந்த ஐந்தாம் தேதியில் இருந்து காணவில்லை என்றும் கூறப்பட்டது. எனவே அவரையும் போலீசார் தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
