நர்சிங் மாணவி படுகொலை… கனவுகளோடு வந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்… கதறும் பெற்றோர்… சிசிடிவி காட்சிகளால் அதிர்ந்த போலீஸ்…!

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள வாடகை அறையில் 19 வயது நர்சிங் மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெமேதரா மாவட்டத்தின் கும்ஹி கிராமத்தைச் சேர்ந்த குஷி சாஹு என்ற அந்த மாணவி, தனது கல்வி மற்றும் சிறந்த எதிர்காலக் கனவுகளுடன் கடந்த 15-20 நாட்களுக்கு முன்புதான் பிலாய்க்கு வந்துள்ளார். அங்குள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்துக்கொண்டே, தனது படிப்பிற்கான செலவிற்காக வைஷாலி நகரிலுள்ள ‘பிரண்ட்ஸ் கஃபே’ என்ற உணவகத்திலும் பகுதிநேரமாக வேலை செய்து வந்துள்ளார். ராம்நகரில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்த இவருடன், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்புதான் அவரது கிராமத்தைச் சேர்ந்த தோழி ஒருவரும் வந்து தங்கத் தொடங்கியுள்ளார்.

https://twitter.com/HateDetectors/status/2075951998629806309/photo/1

சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை அன்று குஷியின் தோழி குளியலறைக்குச் சென்றிருந்த நேரத்தில், அறைக்குள் புகுந்த மர்ம நபர் குஷியை கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார். அவரது வயிறு, முதுகு மற்றும் கைகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திகுத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த குஷியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழி, உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சுபேலா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குஷியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்தின் பேரில் பலரிடம் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Visaka

Recent Posts

அடச்சீ… வண்டியை நிறுத்துடா… அலறிய பெண்… போனட்டில் தொங்கவிட்டு காதலன் ஓட்டம்… மிரள வைக்கும் அதிர்ச்சி வீடியோ… லக்னோவை உலுக்கிய நடுநடுங்கும் சம்பவம்…!

லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே பெண் ஒருவர் காரின் முன்பகுதியில் தூக்கிச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை…

2 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… விஷால் மெகா மார்ட்டில் பயங்கர தீவிபத்து… அடுத்த பேரழிவா?… காஸ்கஞ்சில் பரபரப்பு… நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!

காஸ்கஞ்சில் உள்ள விஷால் மெகா மார்ட்டில் திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த காஸ்கஞ்ச் காவல்துறை உடனடியாகச் செயல்பட்டு…

17 minutes ago

ஐயோ… என் குழந்தைக்கு என்ன ஆச்சு?… செல்போன் மோகத்தால் நிலைகுலைந்த 10 வயது சிறுவன்… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

ஸ்மார்ட்போன்களும் மடிக்கணினிகளும் நம் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் கருவிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இன்று அவை அவர்களின் மனநலனை மெதுவாகச் சிதைக்கும்…

26 minutes ago

“வெட்கித் தலைகுனியப் போகிறோம்”…. மக்களை ஏமாற்றும் முதல்வர்?….. லண்டன் பயணத்தின் பின்னே உள்ள ரகசியம்….. அதிர வைக்கும் உண்மை….!

அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ், 'மார்ஷல் மீடியா' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்துக்…

44 minutes ago

“என்ன மன்னிச்சுடுங்கம்மா…. தங்கச்சியையாவது படிக்க வைங்க”…. மாணவியின் தற்கொலை கடிதத்தில் இருந்த நெஞ்சை பிழியும் வார்த்தை…. சோக சம்பவம்….!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத், விஜயநகர் பகுதியில் உள்ள 'கௌர் சித்தார்த்தம்' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது…

54 minutes ago

“என்னை கடிச்ச பாம்பு இதுதான் டாக்டர்”…. பாட்டிலில் பாம்போடு வந்த இளைஞர்…. தாம்பரம் ஹாஸ்பிட்டலில் ஷாக்….!

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதான மையூர் சாகீக் என்ற இளைஞர், தனது வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மரப்பலகையின்…

54 minutes ago