லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே பெண் ஒருவர் காரின் முன்பகுதியில் தூக்கிச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலன் வேறொரு பெண்ணுடன் காரில் இருப்பதைக்கண்டு அப்பெண் வாகனத்தை மறிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில், காரை இயக்கிய நபர் வாகனத்தை வேகமாக முடுக்கியுள்ளார். இதில் அப்பெண் காரின் முன்பகுதியில் விழுந்த நிலையிலும் கார் நிறுத்தப்படாமல் சிறிது தூரம் இயக்கிச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
காரின் முன்பகுதியில் இருந்து அப்பெண் கீழே விழுந்த பிறகும் இந்தச் சம்பவம் மேலும் தீவிரமடைந்தது. காரை ஓட்டிவந்த நபர், கீழே விழுந்த அப்பெண் மீது மீண்டும் காரை ஏற்றிச் கொல்ல முயல்வது போல் வாகனத்தை அவரை நோக்கி இயக்கியுள்ளார். பின்னர், அங்கிருந்து அந்த நபர் காரை வேகமாக ஓட்டித் தப்பிச் சென்றுவிட்டார். இதில் காயமடைந்த அப்பெண்ணைச் சுற்றி அங்கிருந்த பொதுமக்கள் கூடி, உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
https://twitter.com/HateDetectors/status/2100158752435351807/video/1
இச்சம்பவத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரங்கள் மற்றும் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சம்பவத்தின் முழு பின்னணியைக் கண்டறியவும் தப்பி ஓடிய ஓட்டுநரைப் பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…