இன்றைய காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் ஒரு சிறிய பிரச்சனை என்றால் கூட தற்கொலை முடிவை தான் நாடுகின்றனர். ஆனால் தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடையாது என்பதை யாரும் அறிவதில்லை. வீட்டில் சண்டை, படிக்கும் இடத்தில் ஏதாவது பிரச்சனை என ஒரு சிறு சிறு பிரச்சனைகளுக்கு கூட தற்கொலை முடிவை நாடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் சுசில் நகரை சேர்ந்த அசோக் என்ற 18 வயது இளைஞர் அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இதனிடையே அசோக் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பி அசோக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தற்கொலை செய்வதற்கு முன்பு instagram-ல் அவர் ஒரு ஸ்டோரியையும் வைத்துள்ளார். அதில் முடிவே ஆரம்பம் என்று பதிவிட்டுள்ளார். உடனே இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திடீரென instagram-ல் ஸ்டோரி வைத்துவிட்டு அசோக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…