ஆக்ரா மாவட்டம் மல்பூரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனௌலி காவலர் சாவடிக்கு பின்புறம் உள்ள சாக்கடையில், 17 வயதான சிவம் சவிதா என்ற சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பிறந்தநாள் விழாவின் போது காவல் துறையினரால் கடை ஒன்றில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அந்தச் சிறுவன், மறுநாள் பிணமாக மீட்கப்பட்டிருப்பது பல பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. பிற சிறுவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்த காவல்துறை, சிவமை மட்டும் விடுவிக்கவில்லை என்றும், இரவெல்லாம் தேடியும் கிடைக்காத நிலையில் காலையில் சாக்கடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்றும் அவரது தந்தை கூறிய குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது.
இந்த சோகமான சம்பவத்தில் உத்தரபிரதேச அரசு உடனடியாக தலையிட்டு, சிவமின் மரணத்திற்கான காரணங்கள் குறித்து நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காவல்துறையினரின் அலட்சியம், சட்டவிரோதக் காவல், பணம் பறித்தல் அல்லது வேறு ஏதேனும் தவறான நடவடிக்கைகள் இதில் அடங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது எவ்வித தயவுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு மைனர் சிறுவனின் உயிரோடு சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் அனைத்துக் கோணங்களிலும் தீர விசாரித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைக்கப் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
https://twitter.com/BhimArmyChief/status/2100281666543698061/video/1
கண்ணீரில் மூழ்கியிருக்கும் சிறுவனின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த ஈடுசெய்ய முடியாத பெரும் துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவனிடம் வேண்டுகிறோம். மேலும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அந்த ஏழை குடும்பத்திற்குச் சற்று நிவாரணமும் ஆதரவும் அளிக்கும் வகையில், மாநில அரசு உடனடியாக 30 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
