திடீரென விலக்கப்பட்ட பாதுகாப்பு.. அடுத்த நிமிடம் புதுச்சேரியில் குவிந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்…. தமிழக அரசியலை உலுக்கும் ‘மெகா’ பிளான்….!

Spread the love

தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கிடையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தடுக்கும் நோக்கில் அதிகார மட்டத்தில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

மறுபுறம், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சுமார் 15 எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி பூரணங்குப்பத்தில் உள்ள சொகுசு விடுதியில் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம் போன்ற மூத்த தலைவர்களும் அங்கு முகாமிட்டுள்ளதால், அதிமுகவின் ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவு அளிக்கத் திட்டமிட்டு வருகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இருவேறு கருத்துக்கள் மோதிக்கொண்டதாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில், ஒரு தரப்பினர் ஆதரவு வழங்கலாம் என்று வாதிட்ட நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்தச் சூழ்நிலையிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்காது” என்று கூறி, கட்சிக்குள் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.

இந்த அதிரடித் திருப்பங்களுக்கு மத்தியில், பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுக-வும் அதிமுக-வும் தவெக ஆட்சியமைப்பதைத் தடுக்கக் கைகோர்க்கப் போவதாகப் புதிய தகவல் தீயாய் பரவி வருகிறது. தமிழகத்தின் இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளும் தங்களுக்குப் போட்டியாக உருவெடுத்துள்ள புதிய சக்தியை முடக்கத் திரைமறைவில் கூட்டணி அமைக்க உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதும், பாதுகாப்பு விலக்கப்பட்டிருப்பதும் தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

6 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago