Connect with us

Tamizhanmedia.net

15 நிமிடத்தில் கொரோனாவை அழிக்கும் நாட்டு மருந்து.. ஆதாரத்துடன் நிரூபணம்: கூட்டம் கூட்டமாக செல்லும் மக்கள்..!

NEWS

15 நிமிடத்தில் கொரோனாவை அழிக்கும் நாட்டு மருந்து.. ஆதாரத்துடன் நிரூபணம்: கூட்டம் கூட்டமாக செல்லும் மக்கள்..!

இந்தியாவில் இருக்கும் மாநிலம் ஒன்றில் 15 நிமிடத்தில் கொரோனாவை அ.ழி.க்.கும் நாட்டு மருந்தை நபர் ஒருவர் மக்களுக்கு வழங்கி வருவதால், அங்கு ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள, கிருஷ்ணாபட்டினம் கிராமத்தில், ஆனந்தய்யா என்பவர் நாட்டு மருத்துவம் அளித்து வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, அவரை தேடி வந்த மக்களுக்கு, இவர் இலவசமாக மருந்து செய்து கொடுத்தார். இதை வாங்கிய மக்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

இந்நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையால், இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், ஆன்ந்தய்யாவை நோக்கி இப்போது அப்பகுதி மக்கள் படையெடுக்க ஆரம்பிக்க, அவரும், நாள் ஒன்றிற்கு 500 பேர் வீதம் கட்டணம் இல்லாமல், மருந்து கொடுத்து வந்தார்.

இந்த தகவல் காட்டுத் தீ போல், பரவ இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், மக்கள் ஆந்திராவிற்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் அப்பகுதி இப்போது ஒரு மாநாடு நடக்கும் பகுதி போல் காட்சியளித்து வருகிறது.

நாளுக்கு நாள் மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றதால், உடனடியாக அங்கு விரைந்த மாவட்ட நிர்வாகம், கூட்டம் அதிகம் கூடினால், நோய் பரவல் ஏற்படும் என்று தடை விதித்தது. அதன் பின் இந்த நாட்டு மருந்து ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

அதில், இந்த நாட்டு மருந்தால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரியவந்ததால், மீண்டும் மருந்து வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக நாள் ஒன்றிற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவியத் துவங்கினர்.

இந்த நாட்டு மருந்தால், கொரோனா குணமாகும் என்பது நிரூபிக்கப்படாததால், மக்கள் அங்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், ஆந்திரா மாநில எ.தி.ர்.கட்சி எம்.எல்.ஏக்கள் உடனடியாக அந்த பகுதிக்கு நேற்று மாலை சென்று ஆய்வு நடத்தினர்.

அவரிடம் நாட்டு மருந்து பற்றியும் கேட்டுள்ளனர். அப்போது தெலுங்கா மாநிலத்தை சேர்ந்த இளைஞன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூ.ச்.சு விட முடியாமல், மிகவும் மோ.ச.மான நிலையில் வந்தார்.

அப்போது அவருக்கு சொட்டு மருந்து போன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் 15 நிமிடத்தில், அந்த இளைஞன் சாதரணமாக எழுந்து நின்று, என்னால் இப்போது மூச்சு விட முடிகிறது. பல மருத்துவமனைகளுக்கு கடந்த 20 நாட்களாக சென்று எந்த ஒரு பலனும் இல்லை என்று கூறி, ஆனந்தய்யாவுக்கு நன்றி கூறினார்.

இப்படி ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், இந்த வீடியோ அங்கு வைரலாகி வருகிறது. மேலு, ஆனந்தய்யாவின் இந்த நாட்டு மருந்தை ஆயுஷ் அமைச்சகம் அங்கிகாரம் அளித்துள்ளது.

ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தி வருகிறது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட இதை வாங்கிச் சென்று பலன் அடைந்துள்ளதால், இதில் முதல்வர் ஜேகன் மோகன் ரெட்டி தலையிட்டு, அனைத்து மக்களுக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும் என்று எ.தி.ர்கட்சி எம்.எல்.ஏ சோமிரெட்டி கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top