கொல்கத்தா மாநிலம் பர்கானா மாவட்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் சிறுமியின் பெற்றோர்கள் டியூஷன் சேர்த்து விட்டுள்ளனர். தினமும் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சிறுமி மாலை 6:00 மணிக்கு டியூசனுக்கு சென்று மீண்டும் 8:00 மணி அளவில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல கடந்த சனிக்கிழமை மாலை பள்ளியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிறுமி ஆறு மணி அளவில் டியூசனுக்கு சென்றுள்ளார்.
பிறகு டியூஷன் முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் சமயத்தில் வழியில் உள்ள பூங்காவில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் சிறுமியிடம் பேசி உள்ளார். சிறுமி அவரிடம் பேச்சு கொடுக்காமல் நடந்து சென்ற நிலையில் அதே வழியில் வந்த மேலும் இரண்டு பேர் சிறுமியை வழிமறித்துள்ளனர். பிறகு மூன்று பேரும் சேர்ந்தே சிறுமியை கடத்திச் சென்று மோதிலால் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மூன்று பேரும் குடிபோதையில் இருந்ததால் அவர்களிடமிருந்து தப்பிய சிறுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்கு சென்று உள்ளார்.
தனது மகளின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனே சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சிறுமியை நேரடியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் சிறுமி அடையாளம் காட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…
சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…