நவம்பரில் அரசு விடுமுறையே இல்லாத நிலையில், அடுத்த மாதம் மொத்தமாக அரையாண்டு விடுமுறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 2025 – 26 கல்வி ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவு அடைந்த மறுநாள் விடுமுறை ஆரம்பமாக இருப்பதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்தோடு மகிழ்ச்சியாக மாணவர்கள் கொண்டாட திட்டமிட்டு வருகிறார்கள்.
இதனையடுத்து, டிச.24 முதல் ஜன. 4 வரை 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். தேர்வுக்கான அட்டவணையை விரைவில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட உள்ளது.
