டெல்லியில் 16 வயது பள்ளி மாணவன், தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் தனது உறுப்புகளை தானம் செய்யுமாறும், தான் அனுபவித்த துன்பத்தை எந்தக் குழந்தையும் தாங்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்தான். மத்திய டெல்லியில் உள்ள ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ நிலையத்தின் நடைமேடையில் இருந்து பிற்பகல் 2.34 மணிக்கு மாணவர் குதித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் அருகிலுள்ள பி.எல்.கே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் அவரது தற்கொலை குறிப்பில், அவர் சில ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, நீண்டகால மன துன்புறுத்தலுக்கு அவர்களைக் குற்றம் சாட்டினார். பள்ளியில் தனக்கு நடத்தப்பட்ட விதத்தால் தனது மகன் பல மாதங்களாகப் போராடி வருவதாக அவரது தந்தை குற்றம் சாட்டினார். ஆசிரியர்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் அவரைத் திட்டுவதாகவும், உணர்ச்சி ரீதியாக அவரை காயப்படுத்துவதாகவும் அவர் என்னிடமும் என் மனைவியிடமும் கூறுவார். நாங்கள் பல முறை புகார் செய்தோம், ஆனால் அவர்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை,” என்று தந்தை பிடிஐயிடம் தெரிவித்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
