ரேஷன் கடைக்கு சென்ற தாய்… அடுத்த நொடியே தூக்கில் தொங்கிய மகன்… அதிர்ச்சி தரும் காரணம்…!

By Nanthini on மாசி 20, 2026

Spread the love

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, தாய் கண்டித்த காரணத்திற்காக பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காட்பாடி பிரம்மபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அரும்பருத்தி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற மாணவன், கார்ணாம்பட்டு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய கிருஷ்ணாவை, அவனது தாய் தரணி ரேஷன் கடைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு கிருஷ்ணா மறுப்பு தெரிவிக்கவே, தாய் அவரை கண்டித்துவிட்டு தனது மூத்த மகனுடன் கடைக்குச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

ரேஷன் கடைக்குச் சென்று வீடு திரும்பிய தாய், மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து கதறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட மாணவன், உடனடியாக கருகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பிரம்மபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவனின் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரு சிறிய கண்டிப்புக்காக பள்ளி மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.