காஸாவில் போரால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் போரை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மார்தட்டி கொண்டாலும், இன்னும் மரண ஓலம் ஓய்ந்தபாடில்லை. காஸாவில் நேற்று நள்ளிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள், 20 பெண்கள் உள்பட மொத்தம் 104 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.
வீடுகள், பள்ளிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், தங்கள் வீரரை ஹமாஸ் கொன்றதற்கு பதிலடியாக தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
