திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டை சேர்ந்தவர் சிவகுமார். இவர் ஜங்ஷன் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவருடன் கடந்த 23ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரன்ஸ் என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்பையா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரன்ஸை கைது செய்து விசாரித்த போது விபத்து நடந்த நேரம் அவர் குடிபோதையில் இருந்தது உறுதியானது.
அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் கொலை முயற்சி என்ற வழக்காக மாற்றி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு இதுவரை குடிபோதையில் வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 8 வழக்குகள் கொலை வழக்காக மாற்றப்பட்டது. அதிகபட்சமாக இந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். எனவே மது போதையில் வாகனம் ஓட்டாமல் பொறுப்புடன் செயல்படுமாறு நெல்லை எஸ்பி சிலம்பரசன் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…