காசியாபாத் முராத்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பவுவாபூர் கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கூலி தருவதாகக் கூறி விவசாய நிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன் கேசவ், அங்கு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
இறந்த சிறுவனின் தந்தை சஞ்சய் அளித்த புகாரின்படி, அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்ற விவசாயி, கடந்த ஜூலை 16, 2026 அன்று மதியம் சிறுவனை ஆசை வார்த்தை கூறி தன் வயலுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த விவசாயி விலங்குகளிடமிருந்து தனது பயிர்களைப் பாதுகாக்க, வயலைச் சுற்றி அமைத்திருந்த முட்கம்பி வேலியில் சட்டவிரோதமாக மின்சாரம் பாயவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
https://twitter.com/HumdardAlfaaz/status/2078168303097507903/video/1
சிறுவன் கேசவ் வயலில் வேலை செய்யத் தொடங்கியபோது, எதிர்பாராதவிதமாக அவனது கை அந்த மின்சார வேலியின் மீது பட்டுள்ளது. மின்சாரத்தின் வேகம் தாங்காமல் சிறுவன் அந்த கம்பியிலேயே ஒட்டிக்கொண்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து நிலத்தின் உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று நிகழவுள்ளது. இந்த முழு சூரிய…
தஞ்சாவூர் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசாத விஷயங்களைத் திரித்து, வீடியோவை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று திமுக…
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ஆம்…
தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் தான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு தவறாகப் பேசவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா…