தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு இந்த முறையும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இ
இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், கோவை மாநகர் திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கட்சிக்குள் களை எடுப்பு பணியை தீவிர படுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தேர்தல் மற்றும் கட்சிப் பணியில் சுணக்கம் காட்டிய ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை சரியாக முன்னெடுக்காத 10 மாவட்ட செயலாளர்களின் பதவியைப் பறித்து அவர்களுக்கு பதில் புதியவர்களை நியமிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது
