கேரளாவில் நெகிழ்ச்சி..! 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த 10 மாத குழந்தை… மூளைச்சாவு அடைந்த குழந்தை உறுப்புகளைத் தானம் செய்த பெற்றோரின் துணிச்சல்..!!

Spread the love

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம், தனது மரணத்திலும் ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளித்து கேரளாவின் மிக இளைய உறுப்பு தானம் செய்தவர் என்ற நெகிழ்ச்சியான வரலாற்றைப் படைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி, கோட்டயம் எம்.சி சாலையில் தனது தாய் மற்றும் தாத்தா பாட்டியுடன் காரில் சென்றபோது நேரிட்ட பயங்கர விபத்தில் ஆலின் படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அந்தச் சிறுமிக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அந்தப் பேரிழப்பின் இருண்ட சூழலிலும், மனிதாபிமானத்தின் உச்சமாகத் தங்கள் குழந்தையின் உறுப்புகளைத் தானம் செய்ய அந்தப் பெற்றோர் முன்வந்தது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

ஆலின் உயிரிழந்தாலும், அவரது உறுப்புகள் மூலம் ஐந்து நபர்களுக்குப் புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. விபத்தில் சிக்கித் துடிதுடித்த அந்தப் பிஞ்சு உயிர், இன்று பிறர் உடலில் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு தியாகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தங்கள் குழந்தையின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத துயரத்திலும், மற்றுமொரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற அந்தப் பெற்றோரின் அசாதாரணக் கருணைக்கும், துணிச்சலுக்கும் கேரளா மட்டுமல்லாது ஒட்டுமொத்த தேசமே வீரவணக்கம் செலுத்தி வருகிறது. அந்தச் சிறு தேவதையின் ஆன்மா சாந்தியடையட்டும்.
Soundarya

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

4 மணத்தியாலங்கள் ago