SHOCK: தனியாக சென்ற சிறுமியை சுற்றிவளைத்த 10 தெருநாய்கள்… கொடூரமாக தாக்கி இழுத்துச்சென்ற கொடூரம்… கடவுள் போல காப்பாற்றிய இளைஞர்..!!

By Soundarya on ஐப்பசி 26, 2025

Spread the love

தெலுங்கானாவின் வாரங்கலில் 7 வயது சிறுமியை தெருநாய்கள் கூட்டம் கொடூரமாக தாக்கிய கொடூர சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 8-10 நாய்கள் கொண்ட ஒரு கூட்டம் சிறுமியைத் தாக்கி கடுமையாக காயப்படுத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வாரங்கல் நகரப் பகுதியில் அமைந்துள்ள ஹன்மகொண்டாவின் நியூ ஷயம்பேட்டையில் இந்த துயர சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. வைரலாகும் வீடியோவில், சிறுமி சாலையில் தனியாக நடந்து சென்றபோது, ​​கிட்டத்தட்ட 10 தெருநாய்கள் திடீரென அச்சிறுமியின் மீது பாய்ந்து அவளைக் கடிக்கத் தொடங்கின.

நாய்கள் தாக்கியதால்  சிறுமி தடுமாறி சாலையில் விழுந்தாள். நாய்கள்  கடித்து இழுத்துச் சென்றன. அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு நபர்,  சிறுமியைத் தாக்குவதைக் கவனித்தார். அந்த நபர் உடனடியாக உதவிக்கு விரைந்து சென்று, நாய்களை விரட்டி, உதவியற்ற குழந்தையை மீட்டார். பின்னர் அவர்   சிறுமியை அவரது குடும்பத்தினரிடம் அழைத்துச் சென்றார். பின்னர் அவர் சிறுமியை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, மேலும் இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.