காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்ற….. 10 டாப் நடிகர், நடிகைகள் தெரியுமா….? இதோ நீங்களும் பாருங்க…!!

By admin

Published on:

தமிழ் திரை உலகில் நடிகர்கள் நடிகைகள் தங்களோடு பணிபுரியும் இயக்குனர்கள் அல்லது நடிகர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடுவது வழக்கமாகி வருகிறது 10 ஜோடிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

   

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். இவர் சமீபத்தில் ஒத்த செருப்பு என்ற படத்தின் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார்.

இவர் புதிய பாதை படத்தில் நடித்ததன் மூலமாக சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

எண்பதுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நளினி. இவரை நடிகர் ராமராஜன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவகாரத்தை பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு அருன், அருணா என்று இரட்டை குழந்தையும் இருக்கிறது.

1985 ஆம் வருடம் நடிகை ராதிகா இயக்குனர் பிரதாப்பை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க வில்லை அதே வருடமே அவரை விவகாரத்தை செய்து விட்டார்.

அதன் பிறகு 1990 ஆம் வருடம் ரிச்சர்ட் கார்டியன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரையும் விவகாரத்து செய்தார். அதன் பிறகு தான் 2010 ஆம் வருடம் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ரோகிணியை ரகுவரன் 1996 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவருன் என்று ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் இவர்களும் விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டனர்.

நடிகை லலிதா குமாரி என்பவரை நடிகர் பிரகாஷ்ராஜ் 1994 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரண்டு மகள்களும் மகனும் உள்ளார்கள்.

அதன் பிறகு முதல் மனைவி லலிதாவை 2009 விவகாரத்தை செய்துவிட்டு 2010 ஆம் வருடம் போனிவெர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் ரேவதிக்கும் இயக்குனரும், கேமரா மேனுமான சுரேஷ் மேனனுக்கும் 1986 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு திருமணம் ஆகி 27 வருடங்களுக்கு பிறகு சில கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகரான நாகசைதன்யாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தாவும் காதலித்து வந்த நிலையில் இருவீட்டா சம்பந்தத்தோடு திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் ஆன 4 வருடங்களில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விவகாரத்தை பெற்றுக் கொண்டனர்.

செல்வராகவன் நடிகை சோனியா அகர்வால் ஆகிய இருவரும் சேர்ந்து பல படங்களில் பணியாற்றியதில் காதல் மலர்ந்தது.

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்ட சில வருடங்களே பிரிந்து விட்டார்கள். பின்னர் செல்வராகவன் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

 

<span style=font size 1rem>இயக்குனர் ஏ எல் விஜய் தெய்வத்திருமகள் படத்தின் மூலம் நடிகை அமலா பாலை காதலித்து வந்தால் அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் தற்போது விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்<span>

நடிகர் கமலஹாசன் தன் முதல் மனைவி வாணியுடன் சில காலம் வாழ்ந்து வந்தார். அவர் பிறகு அவரோடு நடித்த சாரிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்சராசன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதன் பிறகு இருவரும் விவகாரத்து பெற்றனர். பின்னர் நடிகை கௌதமியோடு சில காலம் வாழ்ந்து வந்தார். இவர்களும் திருமணமாகாமல் பிரிந்து விட்டார்கள்.