பிரபல தொலைக்காட்சியில் சென்சேஷனலான நிகழ்ச்சியாக இப்போது Mr & Mrs சின்னத்திரை 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் இந்த எபிசோடை மா.கா.பா ஆனந்த் மற்றும் ‘பிக்பாஸ்’ அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.
இதில் பாடகர்கள், குக் வித் கோமாளி பிரபலங்கள், சீரியல் நடிகர்கள் என பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் கணவன் மனைவியாக கலந்துகொண்டனர்.
குறிப்பாக தீபா அக்கா, சீரியல் நடிகை மைனா நந்தினி மற்றும் அவருடைய கணவர் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் யோகி தமது மனைவி மைனாவிடம் புரோபோஸ் செய்த நெகிழ்ச்சியான காட்சி அரங்கேறியது. அப்போது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு நடுவர்களாக கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி அமர்ந்திருந்தனர்.
அதில் கோபிநாத் கூறும்போது சிவாஜி கணேசனுடன் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்த பிரபல பழம் பெரும் நடிகர் ராமதாஸ் தான் யோகியின் (மைனாவின் கணவர்) தாத்தா என்பதை ரிவீல் செய்தார்.
அப்போது யோகி, “நான் என்னென்னவோ முயற்சி செய்தேன்.. திரைத்துறைக்கு வரும் யோசனையே இல்லை.
ஆனால் அப்போதெல்லாம் என் தாத்தா திரைத் துறையைச் சார்ந்தவர் என்பது எனக்கு தோன்றவே இல்லை. இப்போது திரைத்துறையில் வளரும் இந்த வேளையில் தாத்தா உடன் இல்லை என தோன்றுகிறது!” என்று எமோஷனலாக குறிப்பிட்டிருந்தார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…