மீண்டும் இணைகிறார்களா…தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி ….?

By admin

Updated on:

திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ்2003 ஆம் ஆண்டு தனது அண்ணன் திரு. செல்வராகவன் இயக்கத்தில்  காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். இப்படத்தின் பிரிமியர் சோவின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். பின் நாளடைவில் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது.

 

   


இருவரும் ஒரு வருடமாக காதலித்த நிலையில் 2004 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்ததுடன் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்களது 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் தாங்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

 

இவர்களது பிரிவுக்கு காரணங்கள் பல்வேறு சொல்லப்பட்டாலும் அதில் முக்கியமாக கருதப்படுவது தனுஷ் தனது சக நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவதே என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இவர்கள் பிரிந்து வாழ்வதற்கான காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ போவதாக தகவல் வெளியாகி வருகின்றன.

ஆனால் இதனைக் குறித்து இருவரும் உறுதி செய்யுமாறு எந்த விதமான அறிக்கையும் வெளியிடவில்லை. இத்தகவலுக்கு காரணம் இவர்கள் இருவரும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை. ஆனாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வரியா இதனை பொருட்படுத்தாமல் தங்களது வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

 

 

author avatar