பிரித்தானியாவில் மீனவரின் கண்ணில் பட்ட அதிர்ஷ்டத்தை கொடுக்கும் நீல நிற லாப்ஸ்டர்! அரிய வகை புகைப்படம்

Spread the love

பிரித்தானியாவில் மீனவர் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அரிய வகை நீல நிற லாப்ஸ்டர் பிடிபட்ட நிலையில், அதை மீண்டும் கடலுக்குள்ளே விட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Newlyn பகுதியைச் சேர்ந்தவர் Tom Lambourn(25). இவர் கடற்கரை நகரமான Penzance-ல் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு நீளமான மிகவும் அரிதான நீல நிற லாப்ஸ்டர் கிடைத்துள்ளது.

இது போன்ற நீல நிற லாப்ஸ்டர்கள் மிகவும் அரிதான அரிது என்பதால், இதை Tom Lambourn புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் கடலுக்கடியிலே விட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இது என்னுடைய இரண்டாவது மீன்பிடி காலம். இதை பார்த்ததால், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். நான் அது எவ்வளவு நீளம் என்பதை பார்ப்பதற்காக அளந்தேன், இதை வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

இது மிகவும் பெரிதாக இருந்ததிருந்தால், நான் அதை உடனடியாக National Hatchery-க்கு அனுப்பியிருப்பேன். National Hatchery-ல் இருக்கும் அதிகாரிகளுக்கு இந்த லாப்ஸ்டர் புகைப்படங்களை அனுப்பினேன்.

அவர்கள் இது போன்ற லாப்ஸ்டர்கள் மிகவும் அரிதானவை, மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், National Lobster Hatchery செய்தி தொடர்பாள ஒருவர் கூறுகையில், இது ஒரு மிக அரிதான வண்ண உருவமாகும்.

இதனால், Tom Lambourn அதன் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பியபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம். லாப்ஸ்டர்கள் நிலத்திற்கு கொண்டு வர மிகவும் சிறியதாக இருந்தது, அதனால் மீண்டும் கடலில் விடப்பட்டது.

இதனால் அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறினார். கடந்த 2005-ஆம் ஆண்டு, University of Connecticut-ன் பேராசிரியர் Ronald Christensen, மரபணு குறைபாட்டின் விளைவாக இது போன்ற நீல நிறத்தை லாப்ஸ்டர் பெறுவதாக கண்டுபிடிப்பதார்.

இது போன்ற நீல நிற லாப்ஸ்டர் மீனவர்கள் பார்த்தால், அதை அவர்கள் நல்ல அதிர்ஷ்டத்திற்கான அறிகுறி என்று நம்புகின்றனர், இதன் காரணமாகவே அதை சாப்பிடுவதில்லை என்று கூறப்படுகிறது.

Archana

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

3 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

3 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

3 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

3 மணத்தியாலங்கள் ago