தமிழ் திரையுலகில் “கன்னி ராசி” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் நடிகர் பாண்டியராஜன் அவர்கள். இதன்பின் வெளிவந்த “ஆண் பாவம்” படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து இயக்குனராகவும், நடிகராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார். இவருடைய நடிப்பு மக்களிடத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது என்று சொல்லலாம்.
மேலும், நடிகர் பாண்டியராஜன் கடந்த 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ப்ரிதிவிராஜன், பல்லவராஜன் மற்றும் பிரேம்ராஜன் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் நடிகர் பாண்டியராஜன் தனது இரு மகன்களுடன் மட்டுமே இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதில், மூத்த மகன் நடிகர் பிரிதிவிராஜன் தமிழில் வெளிவந்த சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார், கசட தபர, வாய்மை, லாபம் உள்ளிட்ட படங்களில் நடிகர் பிரிதிவிராஜன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்..