தமிழ் சினிமாவிற்கு ஒரு கிடைத்த பொக்கிஷம் என்று சொன்னால் சிவாஜி தான். இவருடைய நடிப்புக்கு ஈடு யாருமே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு நவரசத்திலும் சூப்பராக நடிப்பார். எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அதில் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் சிவாஜியின் ஸ்பெஷல் . இதனாலேயே ரசிகர்கள் பலரும் சிவாஜி மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார்கள். அப்படி சிவாஜி மீது எல்லை கடந்த அன்பு வைத்திருந்த நடிகர் ஒருவர் குறித்து பார்க்கலாம்.

சிவாஜி ஏராளமான ஹீரோயின்களுடன் நடித்திருந்தாலும் அதிகமாக பத்மினியுடன் தான் நடித்திருந்தார். தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் பதமினியுடன் நடித்துள்ளார். இதன் காரணமாக இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகரும் நடிகன் தொடர்ச்சியாக இரண்டு படங்களில் நடித்த காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வருவகிறது. அப்படி இருக்கையில் சிவாஜிக்கு ஜோடியாக 50 படங்களில் நடித்த காதல் கிசுகிசு வராமலா இருக்கும்.

ஒரு கட்டத்தில் பத்மினி தான் சிவாஜியை ஒருதலையாக காதலிக்க தொடங்கினாராம். ஆனால் சிவாஜி அவர் நடிகனாக முன்பே திருமணம் செய்து கொண்டாராம். இந்நிலையில் சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி ஒரு படத்தின் நடித்த போது இருவருக்கும் இடையே திருமண காட்சிகள் படமாக்கப்பட்டபோது பத்மினியின் கழுத்தில் சிவாஜி தாலி கட்டியிருக்கிறார். அந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு பத்மினி அந்த தாலியை கட்டவில்லையாம்.

நிஜமாகவே பாவித்து கொண்டு அந்த தாலியை யாருக்கும் தெரியாமல் தன்னுடைய கழுத்தில் சில மாதம் கட்டி இருந்தாராம். ஒரு கட்டத்தில் இது பத்மினி சகோதரிக்கு தெரிய வர அவர் அம்மாவிடம் சொல்லி சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்று சொல்லி அட்வைஸ் பண்ணி அந்த தாலியை கழட்ட வைத்திருக்கிறார்கள். அதன்பின்னர் பத்மினிக்கு திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாராம்.
