தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் மூன்று வயதில் இருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பாடம் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு ஆடல், பாடல் மூலமாக புகைப்படங்கள் மூலமாக ஆரம்பகால கல்வியை போதித்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் நல்லொழுக்கம், பேசுவது, பழக்க வழக்கங்கள் போன்ற சில நற்குணங்களையும் கற்பித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சத்தான காய்கறி உணவுகளும் முட்டைகளும் வழங்கப்படுகின்றது. தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர்கள் செய்யும் செயல்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் தற்போது சாப்பிட செல்வதற்கு முன்பு குட்டி சிறுமி ஒருவர் நன்றி செலுத்துவிட்டு சாப்டிடா வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் வணக்கம் பாடலை பாடி மற்ற மாணவர்களையும் பாட வைக்கிறார். இதோ அந்த அழகிய காட்சி…