திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சேரும் போது கல்யாண ஆல்பம், வீடியோத் தொகுப்புகள் செம கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.
இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது. சகதியில் இருந்து புரளும் ஜோடி, கேரளத்தில் கட்டிட வேலை செய்வது போல் சூட் செய்யப்பட்ட ஜோடி என போஸ் வெட்டிங் சூட்டாலேயே பேமஸான பல ஜோடிகள் உண்டு. அதையெல்லாம் விட இதில் சம்மந்தமே இல்லாமல் மேடை ஏறி ஆட்டம் போட்டு லைக்ஸ்களைக் குவிக்கும் மணமக்களின் தோழிகளும் உண்டு.
அதேபோல் இப்போதெல்லாம் கல்யாண மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஹிட் அடித்த பாடலுக்கு நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுப்பதும் பேஷன் ஆகிவிட்டது. அந்த வகையில் இங்கேயும் ஒரு ஜோடி அசுரன் படத்தில் இடம்பெற்ற கத்தரி பூவழகி பாடலுக்கு பட்டையைக் கிளப்புகின்றனர். அதிலும் இதில் சிரித்த முகத்தோடு ஹீரோயின் ஆடும் ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைக்கிறது. சினிமா ஹீரோயின் போலவே செம லுக்காக அதில் இருக்கிறார் மணப்பெண். மாப்பிள்ளையும், பொண்ணும் முறையாக பயிற்சி எடுத்துக்கொண்ட தேர்ந்த நடன கலைஞர்கள் போல பட்டையைக் கிளப்புகின்றனர். அதிலும் மணப்பெண்ணின் அந்த க்யூட் ரியாக்ஷனுக்கு லைக்ஸ்கள் குவிந்துவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக…
சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…
தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…
பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…
இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…