“இருமலால் பறிபோன உயிர்” ‘கோல்ட்ரிஃப்’ மருந்து குடித்த 4 வயது சிறுவன் பலி… மருந்து நிறுவனத்தின் மீது அதிரடி நடவடிக்கை…!!

Spread the love

உத்தராகண்ட் மாநிலத்தில் ‘கோல்ட்ரிஃப்’ (Coldrif) என்ற இருமல் மருந்தைக் குடித்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்த மருந்தை உட்கொண்ட ஹர்ஷ் என்ற அந்த சிறுவன், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாகக் கோமா நிலையில் இருந்து வந்துள்ளார். சுமார் 4 மாதங்கள் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 1, 2026) இரவு உயிரிழந்தார்.

இந்தக் குறிப்பிட்ட இருமல் மருந்தில் டை எத்திலீன் கிளைக்கால்   என்ற நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் அதிகளவில் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இது சிறுநீரக செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஏற்கனவே மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இம்மருந்தை உட்கொண்ட 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், உத்தராகண்ட் அரசு இந்த மருந்துக்குத் தடை விதித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Soundarya

Recent Posts

பதற வைக்கும் த.வெ.க-வின் பிளான்..! ‘சீட்’ கிடைக்காத சீனியர்களுக்கு சிவப்புக் கார்பெட்… தேர்தல் முடிவுக்குப் பின் மெகா ட்விஸ்ட்..!!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்…

2 seconds ago

தமிழக வரலாற்றையே மாற்றப்போகும் 2026 தேர்தல்… ரிசல்ட் எப்படி இருந்தாலும் மிகப்பெரிய மாற்றம் வரப்போவது உறுதி… அதிர்ச்சி தரும் உண்மைகள்….!

இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கப்போகும் ஒரு மகா யுத்தத்தின் தீர்ப்பு நாளாக இன்று மே 4, 2026 அமைந்துள்ளது. தமிழ்நாடு,…

4 minutes ago

பெரம்பூர் டூ திருச்சி…! விஜய்க்கு காத்திருக்கும் அக்னிப்பரீட்சை… டெபாசிட் வாங்கவே ‘இவ்வளவு’ ஓட்டு வேணுமா..?

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

7 minutes ago

“மே 29 முதல் கேதுவின் ‘ராஜயோகம்’ ஆரம்பம்!…சொந்த நட்சத்திரத்திற்கு வரும் கேது…கோடீஸ்வரராகப் போகும் அந்த 4 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா?”

வேத ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கியே சஞ்சரிப்பவை. அந்த வகையில், வரும் மே 29-ஆம்…

7 minutes ago

“டேய் என்னடா பண்ணிவச்சிருக்கீங்க”… மாணவர்கள் விடுதியில் விசிறிக்கு இரும்பு கூண்டு…. காரணத்தை கேட்டா அதிர்ந்து போயிருவீங்க…!

இந்தியாவின் பயிற்சி மையங்களின் தலைநகராக அறியப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மாணவர் விடுதி ஒன்றின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில்…

9 minutes ago

திருமணமான 3 மாதத்தில் இப்படியா..? மாமனார் செய்த செயல்… விஷம் குடித்து கவலைக்கிடமான நிலையில் மருமகன்.. நடந்தது என்ன..??

பரேலியின் சுபாஷ் நகர் பகுதியில் உள்ள கார்கேனா கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான அஜய் என்பவருக்கும், ஷேகுபூர் பகுதியைச் சேர்ந்த…

13 minutes ago