பிரபல இசையமைப்பாளரான அனிருத் ஹூக்கும் என்ற இசை நிகழ்ச்சியை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடத்த திட்டமிட்டார். கடந்த மாதம் 26-ஆம் தேதி இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர். சுமார் 45 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையானது.
பின்னர் பாதுகாப்பு காரணங்களால் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அனிருத் அறிவித்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் நாளை கூவத்தூர் பகுதியில் உள்ள மார்க் சொர்ணபூமி என்ற இடத்தில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி முறையீடு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் அனிருத் இசை நிகழ்ச்சியை நடத்துவதாக எம்எல்ஏ தரப்பில் கூறப்படுகிறது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. காவல்துறை விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இசை நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ். கீர்த்தனா, மிகச் சரளமான ஹிந்தியில் பேசும் வீடியோ…