கோடை வெயிலின் உக்கிரம் பயமுறுத்துகிறது. வீட்டை விட்டு வெளியேவே செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்த கோடை பச்சிளம் குழந்தைகள், வளரிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்களை வெகுவாக பாதிக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தில் கோடையில் சிறுநீர் செல்ல வேண்டும். அப்போது தான் நாம் ஆரோக்கியமான அளவுக்கு தண்ணீர் குடிக்கிறோம் என்பது தெரியும். நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதே ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.இதேபோல் கோடை வெயிலை சமாளிக்க வெள்ளரி, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் இதையெல்லாம் மீறி, இங்கே ஒருவர் வெயிலை சமாளிக்கச் செய்த யுக்தி வேற லெவலில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? வயலுக்கு பூச்சி மருந்து அடிக்கும் ஸ்பிரேயரை தன் முதுகில் மாட்டியிருக்கிறார்.
அதன் ஸ்பிரே மூலம் தண்ணீர் வெளியே வரும் பகுதியை தன் தலைக்கு மேல் மாட்டியிருக்கும் இவர், நடக்க, நடக்க தன் கையால் ஸ்பிரே செய்து, தன் தலையிலேயே தண்ணீர் பாயச் செய்கிறார். அடேங்கப்பா கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இப்படி ஒரு டெக்னிக்கா? என இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…
மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…
நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு எஞ்சிய வேட்டி மற்றும் சேலைகளை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியத்…