இணையத்தில் பல வீடியோக்கள் வெளியாகி மனதை கொள்ளை கொள்ளும் . இதில் ஒரு சில வீடியோக்கள் நம் மனதை வருடும் வகையில் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றது. அதிலும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், youtube போன்ற பக்கங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன

இந்த வீடியோக்களில் சில ட்ரெண்டாகி விடுகின்றது. அண்ணன்-தங்கை, அக்கா-தங்கை, அக்கா-தம்பி போன்ற உறவுகள் எப்போதும் உன்னதமானதாக இருக்கும். அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பாசத்தை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி ஒரு பாசம் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது .

முதலில் சேரில் அமர்ந்திருக்கும் அக்கா அழுவதை பார்த்து தம்பி குடுகுடுவென்று ஓடி வந்து அக்காவின் கண்ணீரை துடைக்கின்றான். ஏன் அழுகிறீர்கள் என்று அவரிடம் கேட்கின்றான். மேலும் அந்த தம்பிக்கு எட்டு வயது . அக்காவுக்கு 25 வயது. தனது அக்கா எதற்காக அழுகிறார் என்பது புரியாமல் குழம்பிப் போன தம்பி அவரின் கண்ணீரை துரைத்து விட்டு அவருக்கு ஆறுதல் தெரிவிக்கின்றார். இந்த பாசம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது…
View this post on Instagram
