4 மாத கர்ப்பிணி மனைவி கொலை வழக்கு…! “கணவரை கொடூரமாக குத்தி….” காரில் வந்தவர் வெறிச்செயல்… பழிக்கு பழியா…? நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

By Devi Ramu on புரட்டாதி 18, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரபல யூடியூபர் வைஷ்ணவியின் கணவரான ஹரிபாபு, சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர் ஒருவனால் சரமாரியாகக் குத்திக் படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த காலத்தில், 4 மாதக் கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி வைஷ்ணவியை, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஹரிபாபு கொடூரமாகக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் வெளியே வந்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

   

நடுரோட்டில் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பட்டப்பகலில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதியில் பெரும் பீதியும் பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது. இந்தச் சம்பவம் பழிக்குப்பழியாக நடத்தப்பட்ட கொலையா என்ற கோணத்தில் நிஜாமாபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காரில் தப்பியோடிய கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.