பிரேசிலில் உள்ள ஜோவோ பெசோவா மிருகக்காட்சிசாலையில் 19 வயது இளைஞனை ஒரு பெண் சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிருகக்காட்சிசாலை பொதுமக்களுக்கு திறந்திருந்தபோது இந்த கொடூரமான சம்பவம் நடந்தது. அங்கிருந்தவர்கள் கூற்றுப்படி அந்த இளைஞன் வேண்டுமென்றே தடைசெய்யப்பட்ட பகுதியை மீறி சிங்கக் கூண்டிற்குள் நுழைந்துள்ளார். ஆனால் அதற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
View this post on Instagram
தன்னை நோக்கி நெருங்கி வரும் பெண் சிங்கத்திடமிருந்து தப்பிக்க, அடைப்புக்குள் இருந்த ஒரு மரத்தின் தண்டு மீது ஏறியபோது, அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் உதவிக்காக கத்தத் தொடங்கினர். ஆன்லைனில் பரவும் இதுகுறித்த வீடியோவில், அந்த மனிதன் மரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காட்டுகின்றன . இருப்பினும், அவர் விரைவில் தனது பிடியை இழந்து கீழே விழுந்து, பெண் சிங்கத்தின் அருகே விழுந்தார். சில நொடிகளில், சிங்கம் தாக்கி உயிரிழந்தார்.
